தலைமை நீதிபதியிடம் ஸ்ரீ கிருஷ்ணா அறிக்கை
டெல்லி: சென்னை உயர்நீதி மன்றத்தில் வக்கீல்கள்- போலீசாருக்கு இடையே ஏற்பட்ட மோதலை விசாரித்த நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா இன்று தனது அறிக்கையை உச்சிநீதி மன்ற தலைமை நீதிபதியிடம் தாக்கல் செய்தார்.
கடந்த மாதம் 19ம் தேதி சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் போலீசுக்கும், வக்கீல்களுக்கம் இடையே கடும் மோதல் நடந்தது. இதில் நீதிபதிகள் உட்பட பல வக்கீல்கள் காயமடைந்தனர். நீதிமன்ற வளாகத்துக்குள் இருந்த காவல் நிலையம் தீக்கிரையானது.
இது தொடர்பாக தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. உச்சநீதி மன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் ஒரு நபர் கமிட்டி ஒன்றை அமைத்தது. சென்னையில் இரண்டு நாட்கள் வக்கீல் மற்றும் போலீசாரிடம் விசாரணை மேற்கொண்ட நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா பின்னர் டெல்லி திரும்பினார்.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பான அறிக்கையை அவர் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் அவர்களிடம் தாக்கல் செய்தார். இதனுடன் ஏராளமான ஆவணங்கள் தாக்கல் செய்துள்ளார். உச்சநீதி மன்றம் இது தொடர்பான விசாரனை நாளை (6ம் தேதி) முதல் துவக்குகிறது.