ராஜு சகோதரர்கள்-வாட்லாமணிக்கு 7 நாள் சிபிஐ காவல்
ஹைதராபாத்: சத்யம் மோசடி வழக்கில் சிக்கி கைதாகி சிறையில் இருக்கும் முன்னாள் தலைவர் ராமலிங்கராஜு, அவரது சகோதரர் ராமராஜு உள்ளிட்டோரை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு ஹைதராபாத் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
ராஜு சகோதரர்கள், முன்னாள் தலைமை நிதி அதிகாரி வாட்லாமணி ஸ்ரீனிவாஸ் மற்றும் சத்யம் நிறுவனத்தின் கணக்குகளை கண்துடைப்பு தணிக்கை செய்து மோசடிக்கு உடந்தையாக இருந்த பிரைஸ்வாட்டர்கூப்பர் நிறுவனத்தின் ஆடிட்டர்கள் ஆகியோரை காவலில் அனுமதிக்க கோரி ஹைதராபாத் கோர்ட்டில் சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அனைவரையும் 7 நாட்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்தது.
சமீபத்தில்தான் செபி அதிகாரிகள் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து ராஜுவை விசாரித்தனர். இந்த நிலையில் முதல் முறையாக சிபிஐ அதிகாரிகளின் காவலுக்கு வருகிறார் ராஜு என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications