For Quick Alerts
For Daily Alerts
Just In
விளாத்திகுளம்-மின்னல் தாக்கி தொழிலாளி பலி
விளாத்திகுளம்: விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கியதில் கூலி தொழிலாளி ஒருவர் பலியானார். படுகாயமடைந்த இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விளாத்திகுளம் அருகேயுள்ள ஓ.துரைச்சாமிபுரத்தை சேர்ந்த இருளப்பன், சிங்காரம் மற்றும் அவரது மனைவி லெட்சுமித்தாய் ஆகிய மூவரும் வேடப்பட்டி கிராமத்துக்கு அருகே கரிமூட்டத்திற்கு மண் போடும் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் இருளப்பன் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்.
படுகாயமடைந்த சிங்காரம், லெட்சுமிதாய் ஆகியோர் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து விளாத்திகுளம் இன்ஸ்பெக்டர் ரவி விசாரணை நடத்தி வருகிறார்.
Comments
காயம் பலி விசாரணை போலீஸ் dead விளாத்திகுளம் hospital மருத்துவமனை enquiry injure local body election மின்னல் கூலி
Story first published: Thursday, March 12, 2009, 11:46 [IST]