பாலகொல்லு-திருப்பதியில் சிரஞ்சீவி மனு தாக்கல்!

நேற்று அவர் பாலகொல்லுவில் வேட்பு மனு தாக்கல் செய்த அவர் இன்று திருப்பதியில் அவர் மனு தாக்கல் செய்தார்.
தனது வேட்பு மனுவில் தனக்கும் தனது மனைவி சுரேகாவுக்கும் ரூ.88 கோடி அளவுக்கே சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அதில் சென்னையில் உள்ள பல சொத்துக்களும் அடங்கும்.
சென்னை அண்ணாசாலையில் செஞ்சுரி பிளாசாவில் ஒரு கடையும், அண்ணாமலை டெம்பிள் டவர்சில் 1,200 சதுர அடி பரப்பளவுள்ள ஷோரூமும் உள்ளதாகவும் இதன் மதிப்பு ரூ. 3.5 கோடி என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள நிலமும், கிருஷ்ணா கார்டனில் ரூ.2 கோடி மதிப்புள்ள வீடும், சாலிகிராமம் அருணாசலம் ரோட்டில் ரூ.6 கோடி மதிப்புள்ள கட்டிடமும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டின் மதிப்பை ரூ.14.36 கோடி என்று கூறியுள்ளார். ஆனால், பல்லாயியிரம் அடி பரப்பளவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த வீட்டின் மதிப்பு சொல்லப்பட்டதைவிட பல மடங்கு அதிகமாகும்.
ஆந்திரா, தமிழ்நாடு தவிர பெங்களூரிலும் வணிக வளாகங்கள், புற நகரில் விவசாய நிலங்கள் உள்ளதாகவும் சிரஞ்சீவி கூறியுள்ளார்.
மொத்தத்தில் தனது பெயரில் ரூ. 30.32 கோடிக்கும் மனைவி சுரேகாவுக்கு ரூ. 48 கோடிக்கும் சொத்துக்கள் இருப்பதாகக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications