For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேசிய லீக்-மனித நேய கட்சி: அதிமுகவிலும் சீட் இல்லை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக கூட்டணியில் ஆரம்பத்தில் இருந்தே இடம் பிடித்து வரும் இந்திய தேசிய லீக் கட்சிக்கும், திமுகவால் தொங்கலில் விடப்பட்ட மனித நேய மக்கள் கட்சிக்கும் ஜெயலலிதா சீட் ஒதுக்கவில்லை.

இதையடுத்து இந்த இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

திமுக கூட்டணியில் 2 சீட் கேட்டது தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவான மனித நேய மக்கள் கட்சி. ஆனால், ஒரு சீட் தருகிறோம் என திமுக சொன்னதை ஏற்காமல் அதிமுகவுடன் பேச ஆரம்பித்தது.

இதையடுத்து தனது கூட்டணியில் நெடுங்காலமாக உள்ள இந்திய தேசிய முஸ்லீம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதியை ஒதுக்கிவிட்டு மனித நேயக் கட்சியைப் பற்றி பேசாமலேயே விட்டுவிட்டார் முதல்வர் கருணாநிதி.

இந் நிலையில் இந்தக் கட்சி அதிமுகவிலும் இரண்டு இடங்கள் கேட்டது. ஆனால், அங்கும் இந்தக் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்படவில்லை.

அதே போல ஜெயலலிதாவை நம்பி நெடுங்காலமா அந்தக் கூட்டணியில் உள்ள இந்திய தேசிய லீக் கட்சியையும் அந்தரத்தில் விட்டுவிட்டது அதிமுக.

இந்தக் கட்சிகள் வேலூர், ராமநாதபுரம், மத்திய சென்னை, மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளுக்கு குறி வைத்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் வேலூரில் எல்.கே.எம்.பி. வாசு, மயிலாடுதுறையில் ஓ.எஸ்.மணியன், ராமநாதபுரத்தில் சத்தியமூர்த்தி, மத்திய சென்னையில் எஸ்எஸ் சந்திரன் ஆகியோரை வேட்பாளர்களாக நிறுத்திவிட்டார் ஜெயலலிதா.

முஸ்லீம்களுக்கு சீட்டே இல்லை:

மேலும் அதிமுக சார்பில் ஒரு முஸ்லீம் வேட்பாளர் கூட நிறுத்தப்படவி்ல்லை. நெல்லை வேட்பாளரான கிருஸ்துவரான சிந்தியா பாண்டியன் மட்டுமே சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X