தென் தமிழகத்தில் தொடரும் மழை-குமரியில் 3 பேர் பலி
நெல்லை: தென் தமிழகத்தில் மழை தொடர்ந்து வலுத்து வருகிறது. குமரியில் மின்சாரம் தாக்கி 2 பேர் இறந்தனர் இதையடுத்து மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை காலை வரை விடிய விடிய பொய்தது. பகலிலும் மழை தூறி கொண்டே இருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது.
குற்றாலம் மலையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அருவிகளில் வெள்ள பெருக்கெடுத்துள்ளது.
இதுபோல் பாபநாசம் அகஸ்தியர் அருவி, பணதீர்த்தம் ஆகியவற்றிலும் வெள்ளம் ஏற்பட்டு, பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தென் மாவட்டங்களில் உள்ள அணைகள் வேகமாக நிறைந்து வருகின்றன.
குமரி மாவட்டத்தில் இன்று மூன்றாவது நாளாக மழை கொட்டியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. கடந்த 24 மணி நேர நிலவரப்படி அதிகபட்சமாக குமரியில் 34.5 மிமீ மழை பதிவாகியுள்ளது.
கடல் சீற்றமாகவே காணப்படுகிறது. உப்பளங்கள், செங்கல் சூளைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் அழகியபாண்டியபுரத்துக்கு அருகில் இருக்கும் அந்தபுரத்தை சேர்ந்த பிரமு மற்றும் அருமனை அம்பலகாலனியை சேர்ந்த ஸ்டான்லி ஆகியோர் மின்சாரம் தாக்கி இறந்தனர்.
ரயில் தாமதம்...
மழை காரணமாக நெல்லை மாவட்டம் தளபதிசமுத்திரத்தில் ரெயில் தண்டவளத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் நாகர்கோவில் வரும் ரயில்கள் அனைத்தும் 1 மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தன.












Click it and Unblock the Notifications