For Daily Alerts
Just In
இலங்கை கடற்படை-இந்திய கடலோர பாதுகாப்பு படை தீவிர கண்காணிப்பு
இந்திய கடலோரப் பாதுகாப்புப் படையின் ஏராளமான கப்பல்களும், ரோந்துப் படகுகளும், 14 ஹெலிகாப்டர்களும், டோர்னியர் ரக விமானங்களும் இரவு பகலாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
இந் நிலையில் இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறுகையில், பிரபாகரன் இந்நேரம் தான் விரும்பிய நாட்டுக்கு கடல் வழியாக தப்பிச்செல்ல முயற்சித்துக் கொண்டிருப்பார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் கடல் பகுதியில் சில நடமாட்டங்கள் இருப்பதாக எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது.
பிரபாகரன் தப்பிச் செல்வதைத் தடுக்க, கடற்படை உஷார்படுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவைச் சுற்றிலும் போர்க் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவரை அழித்தே தீருவோம் என்றார்.
Comments
ராணுவம் போர் தமிழ்நாடு chennai sri lanka தமிழர்கள் இலங்கை கடற்படை பலி கண்காணிப்பு coast guard ஹெலிகாப்டர்கள்
Story first published: Friday, April 24, 2009, 10:19 [IST]