For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'அனில்'-தொழிலதிபர்களின் சதி இல்லை!

By Staff
Google Oneindia Tamil News

மும்பை: அனில் அம்பானியைக் கொல்ல போட்டி தொழிலதிபர்கள் யாரும் முயற்சிக்கவில்லை என்றும், தற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் மகாராஷ்ட்ர அரசு தெரிவித்துள்ளது.

அனில் அம்பானியின் ஹெலிகாப்டர் பெட்ரோல் டாங்கில் யாரோ சிலர் மணலைக் கொட்டியதைக் கண்டுபிடித்த ஏர் வொர்க்ஸ் தொழில்நுட்பப் பணியாளர் நேற்று மர்மமான முறையில் மும்பை ரெயில்வே ட்ராக்கில் பிணாகக் கிடந்தார்.

இந்த மரணத்தின் பின்னணி்யில் அனில் அம்பானியின் தொழில் போட்டியாளர்கள் இருப்பதாக புகார் எழுந்தது. அனில் அம்பானியும் இதையே கூறியிருந்தார்.

இப்போது இந்த விகாரம் குறித்து மகாராஷ்ட்ர அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.

பரத் போர்ஜ் இறந்தது தற்கொலைதான் என்றும் அவரது மரணத்தின் பின்னணி்யில் அனில் அம்பானியின் போட்டியாளர்கள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும், அதற்கான ஆதாரங்கள் எதுவும் போலீஸ் வசம் இல்லை என்றும் மகாராஷ்ட்ர மாநில உள்துறை அமைச்சர் ஜெயந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார். மும்பை போலீசும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

சிபிஐ விசாரணை கோரும் பரத் போர்ஜ் குடும்பம்:

பெரிய தொழிலதிபர்களின் சதி வலைக்குள் சிக்கி பரத் போர்ஜ் உயிர் பறிபோய்விட்டதாகவும், இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X