இந்தியாவில் 2 பேருக்கு ஸ்வைன் ப்ளூ?-சென்னை வாலிபர் டிஸ்சார்ஜ்

அதே நேரத்தில் இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளதானதாக் கூறப்பட்ட அமெரிக்காவிலிருந்து திரும்பிய சென்னையைச் சேர்ந்த இளைஞர் உட்பட 5 பேருக்கு ஸ்வைன் ப்ளூ இல்லை என உறுதிசெய்யப்பட்டு, அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
மெக்சிகோ உள்ளிட்ட 15 நாடுகளில் ஸ்வைன் ப்ளூ எனப்படும் பன்றி காய்ச்சல் நோய் அதிவேகமாக பரவி வருகிறது. இதையடுத்து இந்திய அரசு, இந்தியா வரும் அனைத்து விமானங்களையும் சோதனை செய்து வருகிறது.
அதில் அமெரிக்காவில் இருந்து ஹைதராபாத் வந்த சென்னையைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப என்ஜினியர் ஒருவருக்கு ஸ்வைன் ப்ளூ அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர் ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.
இவரை தவிர டெக்சாஸ் மாநிலத்தில் இருந்து டெல்லி வந்த இருவருக்கும், பின்னர் லண்டனில் இருந்த வந்த ஒருவருக்கும் ஸ்வைன் ப்ளூ நோய் தாக்கியதற்கான அறிகுறிகள் இருந்தன. அவர்கள் டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்தம் 7 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் ராம் மனோகர் லோகர் மருத்துவமனையின் ஆய்வாளர் என்.கே.சதுர்வேதி கூறுகையில்,
ஹைதராபாத் மற்றும் டெல்லியில் இருந்த வந்த 5 சாம்பிள்களில் ஸ்வைன் நோய் தாக்கம் எதுவும் இல்லை. மற்ற இருவரை மட்டும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவர்களின் சாம்பிள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்கு பின் முடிவு தெரியும் என்றார்.
இந்நிலையில் அரசு கடந்த சில வாரங்களுக்குள் மெக்சிகோவில் இருந்து இந்தியா திரும்பிய 2000 பேரின் பட்டியலை தயார் செய்து வருகிறது. அவர்களுக்கு நோய்க்கு அறிகுறி இருக்கிறதா என்ற சோதனை நடக்கவுள்ளது.
இதற்கிடையே மத்திய நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் மெக்சிகோ, அமெரிக்காவில் இருந்து வரும் பயணிகள் தங்களுக்கு ஸ்வைன் ப்ளூ வைரஸ் தாக்குதல் உள்ளதா என்பதை சோதித்துக் கொள்ளுமாறும், அவ்வாறு இருப்பது தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு விரையுமாறும் கோரியுள்ளது.
மெக்சிகோவில் நோய் பரவல் குறைந்தது...
இதற்கிடையே இந்த நோய் ஆரம்பித்த மெக்சிகோவில் அதன் பரவல் கட்டுக்குள் வந்துவிட்டது. இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்து விட்டதாக அந் நாட்டு நலத்துறை அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் ஐரோப்பா, அமெரிக்காவில் நோய் பரவல் அதிகரித்து வருகிறது.
-
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சிலிண்டர் வரலை! ஆப்பம்லாம் பிறகு பார்ப்போம்! Variety rice கிடையாது! சென்னை ஆனந்தா ஹோட்டல் அறிவிப்பு -
LPG Gas Cylinder Shortage LIVE: பிரதமர் மோடி அவசர ஆலோசனை -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
எவ்வளவு அசிங்கப்பட்டாலும் திருந்தல.. இந்திய டீம் தோற்கணும்னு சொல்லி அடிவாங்கும் பாகிஸ்தான் அமீர் -
கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தாலும் சிக்கல் வராது.. ஆனால் இந்த ஒரு விஷயத்தை மட்டும் மறக்காதீங்க!












Click it and Unblock the Notifications