இந்தியாவில் 2 பேருக்கு ஸ்வைன் ப்ளூ?-சென்னை வாலிபர் டிஸ்சார்ஜ்

அதே நேரத்தில் இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளதானதாக் கூறப்பட்ட அமெரிக்காவிலிருந்து திரும்பிய சென்னையைச் சேர்ந்த இளைஞர் உட்பட 5 பேருக்கு ஸ்வைன் ப்ளூ இல்லை என உறுதிசெய்யப்பட்டு, அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
மெக்சிகோ உள்ளிட்ட 15 நாடுகளில் ஸ்வைன் ப்ளூ எனப்படும் பன்றி காய்ச்சல் நோய் அதிவேகமாக பரவி வருகிறது. இதையடுத்து இந்திய அரசு, இந்தியா வரும் அனைத்து விமானங்களையும் சோதனை செய்து வருகிறது.
அதில் அமெரிக்காவில் இருந்து ஹைதராபாத் வந்த சென்னையைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப என்ஜினியர் ஒருவருக்கு ஸ்வைன் ப்ளூ அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர் ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.
இவரை தவிர டெக்சாஸ் மாநிலத்தில் இருந்து டெல்லி வந்த இருவருக்கும், பின்னர் லண்டனில் இருந்த வந்த ஒருவருக்கும் ஸ்வைன் ப்ளூ நோய் தாக்கியதற்கான அறிகுறிகள் இருந்தன. அவர்கள் டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்தம் 7 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் ராம் மனோகர் லோகர் மருத்துவமனையின் ஆய்வாளர் என்.கே.சதுர்வேதி கூறுகையில்,
ஹைதராபாத் மற்றும் டெல்லியில் இருந்த வந்த 5 சாம்பிள்களில் ஸ்வைன் நோய் தாக்கம் எதுவும் இல்லை. மற்ற இருவரை மட்டும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவர்களின் சாம்பிள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்கு பின் முடிவு தெரியும் என்றார்.
இந்நிலையில் அரசு கடந்த சில வாரங்களுக்குள் மெக்சிகோவில் இருந்து இந்தியா திரும்பிய 2000 பேரின் பட்டியலை தயார் செய்து வருகிறது. அவர்களுக்கு நோய்க்கு அறிகுறி இருக்கிறதா என்ற சோதனை நடக்கவுள்ளது.
இதற்கிடையே மத்திய நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் மெக்சிகோ, அமெரிக்காவில் இருந்து வரும் பயணிகள் தங்களுக்கு ஸ்வைன் ப்ளூ வைரஸ் தாக்குதல் உள்ளதா என்பதை சோதித்துக் கொள்ளுமாறும், அவ்வாறு இருப்பது தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு விரையுமாறும் கோரியுள்ளது.
மெக்சிகோவில் நோய் பரவல் குறைந்தது...
இதற்கிடையே இந்த நோய் ஆரம்பித்த மெக்சிகோவில் அதன் பரவல் கட்டுக்குள் வந்துவிட்டது. இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்து விட்டதாக அந் நாட்டு நலத்துறை அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் ஐரோப்பா, அமெரிக்காவில் நோய் பரவல் அதிகரித்து வருகிறது.
-
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம்












Click it and Unblock the Notifications