ராகிங்கை தடுக்க மாநில அரசு கமிட்டி-உச்ச நீதிமன்றம்
டெல்லி: ராகிங் கொடுமைகளை தடுக்க மாநில அரசுகள் கமிட்டி ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் நடவடிக்கை வேண்டும் என உச்ச நீதிமன்றம் வழி காட்டியுள்ளது.
பல ஆண்டுகளாக காணாமல் போயிருந்த ராகிங் அரக்கன் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்கி வருகிறான். கடந்த மார்ச் மாதம் ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் அமன் கச்சாரூ என்ற மாணவன் ராகிங் கொடுமை காரணமாக பலியானான். இதை தொடர்ந்து ஆந்திராவில் பெண்கள் கல்லூரியில் ராகிங் நடப்பது வெளிச்சத்துக்கு வந்தது.
மீண்டும் ராகிங்- 6 மாணவர்களுக்கு காது கேட்கவில்லை...
இந்நிலையில் ஹிமால பிரதேசத்தில் சானாவர் பகுதியில் உள்ள பிரபல லாரன்ஸ் பள்ளியில் 11 மாணவர்கள் ராகிங் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் 6 பேருக்கு காது கேட்பதில் கோளாறு ஏற்பட்டுள்ளது. சீனியர் மாணவர்கள் கண்மூடித்தனமாக தாக்கியதை அடுத்து ஒரு மாணவர் கேட்கும் திறனை 70 சதவீதம் இழந்துவிட்டதாக தெரிகிறது.
இதையடுத்து பள்ளி நிர்வாகம், ராகிங் செய்த 7 மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கியுள்ளது. அந்த ராகிங் கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட மாணவர் பஞ்சாப் போலீஸ் உயர் அதிகாரியின் மகன் என தெரிகிறது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பில்,
மாநில அரசுகள் கமிட்டி ஒன்றை உருவாக்கி அதன் மூலம் ராகிங்கை கட்டுப்படுத்த வேண்டாம். மேலும் ராகிங் கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அரசு நல்ல மருத்துவ வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.
கல்லூரிகளில் மது மற்றும் போதை மருந்து உபயோகம் இருந்தால் அதை தடுக்க வழிவகை செய்ய வேண்டும். மாணவர்கள் இப்பழக்கத்தில் இருந்து மீண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications