வழுக்கி விழுந்து முன்னாள் அமைச்சர் சரஸ்வதி மரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் தமிழக அமைச்சர் பி.டி.சரஸ்வதி நேற்று அவரது வீட்டு குளியலறையில் வழுக்கி விழுந்து இறந்தார். அவருக்கு வயது 70.

1977ல் எம்ஜிஆரின் அமைச்சரவையில் சமூகநலத்துறை அமைச்சராக இருந்தவர் பி.டி.சரஸ்வதி. திருமணம் செய்து கொள்ளவில்லை. சென்னை நந்தனத்தில் உள்ள வீட்டில் அவர் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

நிம்மு வசந்த் என்ற சமூக சேவகி அவரை கவனித்து வந்தார். வெளியில் சென்று வருவதற்கு ஆட்டோ டிரைவர் ஒருவரை நியமித்திருந்தார் சரஸ்வதி.

இந்நிலையில் நேற்று காலை சுமார் 10.30 மணிக்கு ஆட்டோ டிரைவருக்கு போன் செய்து வெளியே செல்ல வேண்டும் மதியம் 2.30 மணிக்கு ஆட்டோவை கொண்டு வருமாறு கூறியுள்ளார். மதியம் வீட்டுக்கு வந்த ஆட்டோ டிரைவர் நீண்ட நேரம் கதவை தட்டியுள்ளார். ஆனால், உள்ளிருந்து எந்த பதிலும் வரவில்லை.

இதையடுத்து சரஸ்வதி வேறு ஆட்டோவில் சென்றிருக்கலாம் என நினைத்து ஆட்டோ டிரைவர் சென்றுவிட்டார். பின்னர் மாலை 6 மணிக்கு ஆட்டோ டிரைவர் மீண்டும் வந்து கதவை தட்டி பார்த்தார். பின்னர் அவரது மொபைலுக்கு தொடர்பு கொண்டார். அப்போது அவர் மொபைல் வீட்டுக்குள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சந்தேகமடைந்த ஆட்டோ டிரைவர், வார்டு கவுன்சிலர் சைதை ரவி மூலம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக வந்த போலீசார் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போது பி.டி.சரஸ்வதி குளியலறையில் தலையில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+