மக்களவைக்கு இடைத் தேர்தல் வரலாம்-சு.சாமி
மதுரை: 1998ல் நடந்தது போல மக்களவைக்கு இடைத் தேர்தல் வந்தாலும் வரலாம். அதே போன்று தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தலும் வரலாம் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி கூறினார்.
மதுரை திருமங்கலத்தில் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
அதிமுக ஆதரவுடன் மதுரையில் நான் போட்டியிடலாம் என்ற நிலை இருந்தது. ஆனால், அதிமுக அணியில் கம்யூனிஸ்ட், பாமக, மதிமுக போன்றவைகளை இணைத்து கொண்டது.
இதனால், நான் பாஜக கூட்டணியில் தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. அதனால் பஞ்சாப், டெல்லி, தமிழகம் உள்பட இதுவரை 14 பிரசார கூட்டங்களில் பேசியுள்ளேன்.
கடந்த 1998ல் நடந்தது போல மக்களவைக்கு இடைத் தேர்தல் வந்தாலும் வரலாம். அதே போன்று தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தலும் வரலாம்.
நாடாளுமன்றத்துக்கு செல்வது எனக்கு எளிது. என் கருத்துகள் மக்களை முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதற்காகத் தான் பிரசாரத்தில் ஈடுபட்டேன் என்றார்.