புலிகளை வீழ்த்தி விட்டோம்-பொன்சேகா
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவம் முழுமையாக வீழ்த்தி விட்டோம். நாட்டை முழுமையாக புலிகளின் பிடியிலிருந்து மீட்டு விட்டோம் என இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
பிரபாகரன் கொல்லப்பட்ட தகவல் வெளியானதும் சரத் பொன்சேகா இதுகுறித்து தெரிவிக்கையில், இலங்கை படைகள், விடுதலைப் புலிகளை ராணுவ ரீதியாக வென்று விட்ன. நாட்டை புலிகளின் பிடியிலிருந்து மீட்டு விட்டோம் என்றார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து இலங்கை முப்படைகளின் தளபதிகளும் இன்று மாலை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து வெற்றிச் செய்தியைத் தெரிவிக்கவுள்ளனர்.
நாளை நாடாளுமன்றத்தில் அதிபர் ராஜபக்சே முறைப்படி இதை தெரிவிக்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications