இலங்கை-சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
கோவை: இலங்கை ராணுவம் தொடர்ந்து அப்பாவித் தமிழர்களைக் கொன்று வருவதற்குக் கண்டனம் தெரிவித்து கோவை மத்திய சிறையில் 90 கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகள் இன்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்கள் அனைவரும் பெரியார் திராவிடக் கழகம், தமிழ் தேசிய இயக்கம், மதிமுக ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள்.
இவர்களில் 28 பேர் ராணுவ வாகனத்தைத் தாக்கியதாக கைது செய்யப்பட்ட பெரியார் தி.க. தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆவர்.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளியாகும் செய்திகளை தாங்கள் நம்பவில்லை என்றும், அவர் இன்னும் உயிருடன்தான் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications