மாமனாரை கொலை செய்த மாயா வெங்கடேசன் கைது
ஓட்டப்பிடாரம்: மாமனார் கொலை வழக்கில் சர்ச்சைக்குரிய நாகை மாவட்ட தொழிலதிபர் மாயா வெங்கடேசன் கைது செய்யப்பட்டார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்தவர் மாயா வெங்கடேசன். இவர் மீது நிலம், பணமோசடி உள்ளிட்ட 22 வழக்குகள் உள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன் ஓட்டபிடாரம் அருகே பசுவந்தனை அருகில் சிமிண்ட் தொழிற்சாலை தொடங்க முன்னாள் ஜானதிபதி வெங்கட்ராமன் தலைமையில் விழா நடத்தினார். பல்வேறு காரணங்களால் இப்பணி கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் கடந்த 13ம் தேதி ஆலையின் நிர்வாக இயக்குனரும், மாயா வெங்கடேசனின் மாமனாருமான வள்ளியூர் முத்துகிருஷ்ணன் ஆலையை பார்வையிட சென்றார். அவருடன் மாயா வெங்கடேசனின் கார் டிரைவர் சென்னையை சேர்ந்த ரமேஷ், மதுரையை சேர்ந்த கண்ணன் ஆகியோரும் சென்றனர்.
அங்கு அவர்களை மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களால் தாக்கியது. இதில் முத்து கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டார். காயமடைந்த கண்ணன் மருத்துமவனையில் சேர்க்கப்பட்டார். ரமேஷ் உயிர் தப்பினார்.
இந்த வழக்கில் மாயா வெங்கடேசன் மீது சந்தேகம் ஏற்பட்டு போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். சொத்தில் பங்கு கேட்டு மாமனார் தொல்லை செய்ததால் கூலி படையை ஏவி அவரை கொலை செய்ததாக மாயா வெங்கடேசன் வாக்கு மூலம் கொடுத்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.