கற்பழித்து சித்திரவதை-மலேசிய இளவரசர் மீது மனைவி புகார்

மலேசியாவின் கேளந்தன் மாநில ராஜ குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் தெங்கு டிமென்காங் முகம்மத் பக்ரி. 31 வயதான இவர் சமீபத்தில் இந்தியனேசியாவை சேர்ந்த 17 வயதான அமெரிக்க மாடல் மனோகரா ஒடேலியா பினோட் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்த சமயத்தில் இருந்தே இளவரசர் தனது மனைவியை கொடுமைப்படுத்தியதாகத் தெரிகிறது. இதையடுத்து இளவரசி பினாத் பலமுறை தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால், ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவரை வெளியில் விடவில்லை.
இது குறித்து பினாத்தின் தாயார் பல முறை மலேசியா மற்றும் இந்தோனேசிய அரசிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை.
அவர் கூறுகையில், என் மகளை இளவரசர் கொடுமைப்படுத்துகிறார். அவளை அடித்து துன்புறுத்துகிறார். அவளது மார்பு பகுதியில் கத்தியால் கீறி சித்திரவதை செய்துள்ளார். தனது மகள் இப்படி காட்டுமிராண்டித்தனமான கொடுமைகளை அனுபவிப்பதை எந்த பெற்றோர்களும் பார்த்து கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள்.
இது குறித்து மலேசிய அரசிடம் முறையிட்ட போது அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. என்னை மலேசியாவுக்குள் நுழைய விடாமல் அரசு தடுத்து வி்டடது என்றார்.
இந்நிலையில் சமீபத்தில் இளவரசரின் தந்தையின் மருத்துவ சிகிச்சை தொடர்பாக இளவரசர் மற்றும் குடும்பத்தார் சென்றிருந்தனர். அப்போது அவர்களுடன் சென்ற பினாத் சிங்கப்பூர் போலீசாருக்கு ரகசியமாக தகவல் தெரிவித்து கொடூர இளவரசனிடம் இருந்து தப்பித்துள்ளார்.
அவர் கூறுகையில்,
என்னை இளவரசர் செக்ஸ் அடிமை போல் நடத்தினார். நான் விரும்பாத சமயங்களில் என்னை தொந்தரவு செய்து கற்பழித்தார். தாக்கப்பட்டு, சித்திரவதைக்கு ஆளாகி அந்த துன்பத்தை தாங்கி கொள்வதே எனது தினசரி நடவடிக்கை ஆகிவிட்டது.
இதை நான் வெளியில் சொல்ல முயன்ற போது எனக்கு மயக்க ஊசி போட்டுவிட்டார். சில சமயங்களில் எனக்கு போதை மருந்தும் ஏற்றிவிட்டார். இதனால் எனக்கு ரத்த வாந்தி ஏற்பட்டது. பல முறை என் உடலின் பல பகுதிகளில் கத்தியால் கீறியுள்ளார். சாதாரண மனிதர்களால் இது போன்ற வக்கிரங்களை செய்ய முடியாது.
அவர்களுடன் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சமயத்தில் நான் இந்த வலிகளை வெளிகாட்டாமல் சிரித்து கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் வீட்டுக்கு வந்தவுடன் மீண்டும் சித்திரவதை ஆரம்பமாகிவிடும்.
நான் ஒவ்வொரு முறையும் துன்பப்படும் போது, அது குறித்து எனது தாயார் புகார் செய்யும் போதும் இந்தோனேசிய அரசு நான் நன்றாக இருப்பதாக கூறி ஏமாற்றியது என்றார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications