குடிநீர்-காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்
புளியங்குடி: நெல்லை அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
நெல்லை மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே சங்கனபேரி கிரமாத்தில் சுமார் 300 வீடுகள் உள்ளன. இப்பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு ஆழ்குழாய் கிணறுகள் இணைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் அந்த ஆழ்குழாய் கிணறுகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் பொதுமக்களுக்கு சீரான குடிநீரை விநியோக்க முடியவில்லை. இதையடுத்து இருக்கும் தண்ணீரை பலருக்கும் பகிர்த்து அளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் அந்த தண்ணீரும் சுகதாராமற்ற நிலையில் வருகிறது.
இதுபற்றி பஞ்சாயத்து தலைவரிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சங்கனபேரி கிராமத்தை சேர்ந்த பெண்கள் வாசுதேவநல்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிகுடங்களுடன் நேற்று முற்றுகையிட்டனர்.
மேலும் சுகாதாரமற்ற தண்ணீரையும் கொண்டு சென்றனர். அப்போது அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து பொதுமக்கள் சார்பில் குடிநீருக்காக புதிய கிணறு தோண்ட வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications