இலங்கை துணைத் தூதர் அம்ஸா லண்டனுக்கு மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் துணைத் தூதராகப் பணியாற்றி வரும் அம்ஸாவின் சேவையைப் பாராட்டி அவரை லண்டன் துணைத் தூதராக இலங்கை அரசு மாற்றியுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின் போரின்போது திரைமறைவில் இருந்தபடி இந்தியாவிலிருந்து பல்வேறு வகையான ஆதரவைத் திரட்டியவர் அம்ஸா. மேலும், தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் வெடித்தபோது அதை சமாளித்ததால் ராஜபக்சேவிடம் இவருக்கு நற்பெயர் கிடைத்தது.
இந்த நிலையில், அம்ஸாவின் சேவையைப் பாராட்டும் வகையில் அவரை லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் துணைத் தூதராக மாற்றியுள்ளது இலங்கை அரசு.
நான்காம் ஈழப் போர் நடந்த 3 ஆண்டு காலமாக அம்ஸா சென்னையில் இருந்தபடி பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications