சென்செக்ஸில் 256 புள்ளிகள் உயர்வு
Subscribe to Oneindia Tamil
மும்பை: வாரத்தின் இறுதி நாளான இன்று மீண்டும் இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் சூடு பிடித்தது. இன்று 256 புள்ளிகள் ஏற்றத்துடன் நிலைப் பெற்றது சென்செக்ஸ்.
இன்று காலை 178 புள்ளிகள் உயர்வுடன் துவங்கிய சென்செக்ஸில் வர்த்தகம் சீராக நடந்தது. மூலதனப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், ஐடி மற்றும் உலோகத் துறைப் பங்குகள் இன்று நல்ல லாபத்தில் கைமாறின.
டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டால், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் இன்போஸிஸ் பங்குகள் நல்ல லாபத்தில் கைமாறின.
என்டிபிசி, ஏசிசி, ஓஎன்ஜிசி, டாடா பவர் போன்றவை நஷ்டத்தைச் சந்தித்த பிரபல பங்குகள்.
ஹாங்காங் மற்றும் ஜப்பானின் பங்குச் சந்தைகளும் இன்று நல்ல ஏற்றம் பெற்றன.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 14521 புள்ளிகளாகவும், நிப்டி 62 புள்ளிகள் உயர்ந்து 4313 ஆகவும் நிலைபெற்றது.












Click it and Unblock the Notifications