கலைஞர் அரங்கம் கட்ட எதிர்ப்பு-கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் கலைஞர் அரங்கம் கட்டுவதற்கு, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து மன்றக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். சர்வ கட்சி சார்பில் ஊர்வலம் நடத்தினர்.
ராமேசுவரம் நகராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவர் ஜலீல் தலைமையில், ஆணையர் போஸ் முன்னிலையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், ராமேஸ்வரம் பாண்டியன் நகரில் கலைஞர் அரங்கம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில முக்கிய கோரிக்கைளை திமுக கவுன்சிலர்கள் முன் வைத்தனர்.
ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, மார்க்சிய கம்யூனிஸ்ட், பாஜக ஆகிய கட்சிகளின் கவுன்சிலர்கள் 9 பேர் வெளிநடப்பு செய்தனர்.
ஆனால், இந்த தீர்மானத்திற்கு 12 கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் தீர்மானம் வெற்றி பெற்றது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக கூட்டணி கவுன்சிலர்கள் மற்றும் அதிமுக நகரச் செயலர் பெருமாள், மதிமுக நகரச் செயலர் பாஸ்கரன், இளைஞரணி செயலாளர் இளங்கோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கருணாகரன், செந்தில், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலாளர் முருகானந்தம், தேமுதிக மாவட்ட துணைச் செயலாளர் முத்துகாமாட்சி, தெட்சிணாமூர்த்தி,
பாமக நகரச் செயலர் முருகன் உள்ளிட்ட சர்வ கட்சி பிரமுகர்கள் ஊர்வலமாகச்சென்று, ராமேசுவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி ஆய்வு செய்து கொண்டிருந்த மாவட்டக் கலெக்டர் வாசுகியிடம் புகார் மனு அளித்தனர்.












Click it and Unblock the Notifications