சென்னையின் மையப் பகுதியில் கன்னடக் கவிஞருக்கு சிலை- கன்னட அமைப்பு புது நிபந்தனை

பெங்களூர் அல்சூர் ஏரிப் பகுதியில் தமிழ்ச் சங்கம் சார்பில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையைத் திறக்க விடாமல் அங்குள்ள கன்னட அமைப்புகள் இடையூறு செய்து வருகின்றன.
பல ஆண்டுளாக சாக்குப் பையில் மூடிக் கிடக்கிறது வள்ளுவர் சிலை.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண கன்னடக் கவிஞர் சர்வஞ்னாவின் சிலையை சென்னை அயனாவரத்தில் எழுப்ப அனுமதிக்கலாம் என தீர்வு கூறப்பட்டது. இதை கன்னட அமைப்புகள், கர்நாடக அரசு ஆகியவை ஏற்றுக் கொண்டன.
இதையடுத்து சமீபத்தில் சென்னைக்கு வந்த கர்நாடக முதல்வர் எதியூரப்பா, பெங்களூர் திருவள்ளுவர் சிலைத் திறப்புக்கு வருமாறு முதல்வர் கருணாநிதிக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில் கன்னட ரக்சன வேதிகே என்ற கன்னட அமைப்பு புதுப் பிரச்சினையைக் கிளப்பியுள்ளது. சென்னை நகரின் மையப் பகுதியில், சர்வஞ்னரின் சிலையை வைத்தால்தான் திருவள்ளுவர் சிலையைத் திறக்க அனுமதிப்போம் என அந்த அமைப்பின் தலைவர் நாராயண கெளடா கூறியுள்ளார்.
கர்வார் வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை நகரின் மையப் பகுதியில் சர்வஞ்னரின் சிலை திறக்கப்பட வேண்டும். ஆனால் அயனாவரத்தில் உள்ள கன்னட பவனின் வளாகத்திற்குள் அந்த சிலையை திறக்க சதி நடக்கிறது.
இதை அனுமதிக்க முடியாது. சென்னையின் மையப் பகுதியில் சர்வஞ்னரின் சிலையைத் திறந்தால்தான் வள்ளுவர் சிலையைத் திறக்க அனுமதிப்போம் என்றார்.
மேலும், அடுத்த மாதம் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம், பெல்காம் பிரச்சினை உள்ளிட்டவை குறித்து மனு அளிக்கப் போவதாகவும் கெளடா தெரிவித்தார்.
-
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications