தீவிரவாத தடுப்பு சட்டம்-ஜனாதிபதி யோசனையை நிராகரித்த மோடி
அகமதாபாத்: குஜராத் மாநில திட்டமிட்ட குற்ற தடுப்புச் சட்ட மசோதாவில் 3 திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு கூறி குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட, குஜராத் மாநில திட்டமிட்ட குற்றத் தடுப்பு சட்ட மசோதாவை குஜராத் மாநில சட்டசபை இன்று மீண்டும் நிறைவேற்றியுள்ளது.
இந்த புதிய சட்ட மசோதாவில் திட்டமிட்ட குற்றம் என்ற வார்த்தை வரும் இடங்களில் எல்லாம் தீவிரவாதம் என்ற வார்த்தையும் உபயோகிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்ட மசோதாவை முன்பு நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியிருந்தது குஜராத் அரசு. ஆனால் அதில் மத்திய அரசின் ஆலோசனைப்படி 3 திருத்தங்களை கூறியிருந்தார் பிரதீபா பாட்டீல்.
இருப்பினும் அதை ஏற்க மறுத்த குஜராத் அரசு அதே சட்ட மசோதாவை மீண்டும் இன்று நிறைவேற்றியுள்ளது.
மேலும், இந்த சட்டத்தில் தீவிரவாதம் என்ற வார்த்தையை சேர்த்ததற்குக் காரணம், குஜராத்தில் தீவிரவாதத் தடுப்புச் சட்டம் என்று தனியாக ஏதும் இல்லாததே என்று குஜராத் அரசு கூறுகிறது.
முதலில் இந்த சட்ட மசோதாவை கடந்த 2003ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அப்போது தீவிரவாத தடுப்புச் சட்டம் (பொடா) நாடு முழுவதும் அமலில் இருந்தது. எனவே அப்போது குஜராத் சட்ட மசோதாவில் தீவிரவாதம் என்ற வார்த்தையை சேர்க்கவில்லை.
மகாராஷ்டிர மாநில திட்டமிட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தைப் பின்பற்றி இந்த சட்டத்தை குஜராத் அரசு இயற்றியது. இருப்பினும் இந்த சட்ட மசோதாவை மத்திய அரசு நிறுத்தி வைத்து திருப்பி அனுப்பி விட்டது.
இதையடுத்து மீண்டும் இந்த சட்ட மசோதாவை குஜராத் அரசு அனுப்பி வைத்தது. ஆனால் 2வது முறையும் இந்த மசோதாவை குடியரசுத் தலைவர் நிராகரிக்க வேண்டும் என மத்திய அரசு ஆலோசனை கூறியதால் மறுபடியும் நிராகரிக்கப்பட்டது.
3 திருத்தங்களை மேற்கொண்டால் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம் என குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு ஆலோசனை வழங்கியது. இதையடுத்து மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொளஅவதாக நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
ஆனால் இந்த மசோதாவில், ஒரு போலீஸ் அதிகாகரி முன்பு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தால் செல்லும் என்ற அம்சத்தை ஏற்கவே முடியாது என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
மேலும், அரசு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தால் நீதிமன்றத்தால் குற்றவாளிக்கு ஜாமீன் வழங்க முடியாது என்ற அம்சமும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் சிதம்பரம் கூறியிருந்தார். இதேபோல இன்னொரு திருத்தத்தையும் மத்திய அரசு கூறியிருந்தது.
ஆனால் இவை எதையும் செய்யாமலேயே அதே சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பவுள்ளது குஜராத் அரசு.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications