For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரையில் ஆய்வு மையம் தொடங்க யாஹூ திட்டம்

By Staff
Google Oneindia Tamil News

Yahoo research centre likely to be set up in Madurai
மதுரை: உலகின் முன்னணி இணையதள நிறுவனமான யாஹூ தனது ஆய்வ மையம் ஒன்றை மதுரையில் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.

விரைவில் யாஹூ இந்தியா நிறுவன அதிகாரிகள் குழு மதுரைக்கு வந்து இதுதொடர்பான ஆய்வுகளில் ஈடுபடவுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஒரு கல்வி நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆய்வு மையம் தொடங்கப்படுகிறது.

இந்த ஆய்வு மையத்தின் மூலம் 3 ஆண்டு கால ஆய்வுத் திட்டம் ஒன்று மேற்கொள்லப்படவுள்ளது. பல்வேறு கம்ப்யூட்டர் அறிவியல் தொடர்பான ஆய்வுகள் குறிப்பாக கிளவுட் கம்ப்யூட்டிங் குறித்த ஆய்வு முக்கியமாக மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த ஆய்வில் ஆசிரியர்கள், மாணவர்களையும் ஈடுபடுத்த யாஹூ இந்தியா திட்டமிட்டுள்ளது.

இந்த ஆய்வு மையத்துடன் கூட்டு செயல்பாட்டுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கல்வி நிறுவனத்தின் ஆசிரியர்களுடனும் யாஹூ இந்தியா அதிகாரிகள் குழு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது. அதன் பின்னர் ஆய்வு மையம் மற்றும் ஆய்வுத் திட்டங்கள் குறித்து விரிவாக முடிவு செய்யப்படும்.

அடுத்த 2 நாட்களில் இதுகுறித்த தகவல்கள் முறைப்படி வெளியிடப்படும் என யாஹூ இந்தியா ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பிரிவு இயக்குநர் கே.சிதம்பரம் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X