சுப்பிரமணியர் சுவாமி மீது விழுந்த சூரிய ஒளி!
Subscribe to Oneindia Tamil
ராமநத்தம்: ராமநத்தம் அருகே கோவிலில் சுப்பிரமணியர் சுவாமி மீது சூரிய ஒளி விழுந்தது.
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்து பனையந்தூர் கிராமத்தில் உள்ளது மீனாட்சி அம்பிகை உடனுறை சுந்தரேஸ்வரர் சுவாமி கோவில். இந்தக் கோயில், முதலாம் ராஜேந்திர சோழனால் கி.பி. 1017ம் ஆண்டு கட்டப்பட்டது.
இந்த கோவிலில் உள்ள சுப்பிரமணியர் சுவாமியின் முகத்தில் ஆடிப்பெருக்கிற்கு ஒரு வாரத்திற்கு முன்பும், ஆடிப்பெருக்கு முடிந்த பின் ஒரு வாரத்திற்கு தினமும் காலை 8 மணி முதல் 8.05 மணி வரை சூரிய ஒளி விழும்.
தமிழகத்தில் உள்ள ஒரு சில கோவிலில் மட்டுமே இது போன்று அரிய நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஆண்டுக்கு ஒரு முறை சுப்பிரமணியர் சுவாமி மீது நேரடியாக சூரிய ஒளி விழும் காட்சியைக் ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர்.












Click it and Unblock the Notifications