சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மேலும் 3 நீதிபதிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மேலும் 3 புதிய நீதிபதிகளை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பரிந்துரைக்கப்பட்டுள்ள 3 பேருமே மாவட்ட நீதிபதிகள் ஆவர். உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ஆறுமுக சாமி, தமிழ்நாடு மாநில சட்ட சேவை ஆணைய உறுப்பினர்-செயலாளர் மதிவாணன், பதிவாளர் (விஜிலென்ஸ்) கே.பி.கே.வாசுகி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நான்கு நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. விரைவில் நீதிபதி பிரபுல்ல குமார் மிஸ்ரா, பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ளார். அவரது இடம் காலியானால் எண்ணிக்கை 5 ஆக உயரும்.

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 60 என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+