For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

10 கிலோ தங்கம் கடத்திய சீர்காழி வாலிபர் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சிங்கப்பூரில் இருந்து 10 கிலோ தங்கம் கடத்தி வந்த சீர்காழியைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சிங்கப்பூரில் இருந்து நேற்றிரவு சென்னை வந்த டைகர் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து இறங்கிய பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது சீர்காழியைச் சேர்ந்த ரவி (35) 10 கிலோ தங்கம் வைத்திருப்பது தெரியவந்தது.

இந்த தங்கத்துக்கு அவர் ரூ.5 லட்சம் வரி கட்டியிருந்தாலும் இதை வாங்க அவருக்கு ரூ. 1.5 கோடி எங்கிருந்து வந்தது என்று விசாரி்ததனர்.

அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசவே அவரை தனியே அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது தமிழ்நாட்டுக்கு விமானம் ஏற வந்தபோது தன்னை 2 பேர் வந்து சந்தித்ததாகவும் 10 கிலோ தங்கத்தை சென்னைக்கு கொண்டு சென்று விட்டால் ரூ.8,000 தருவதாக சொன்னதாகவும், பணத்துக்கு ஆசைப்பட்டு தங்கத்தை கடத்தி கொண்டு வந்ததாகவும் கூறினார்.

இதையடுத்து தங்கததை பறிமுதல் செய்த அதிகாரிகள் ரவியை கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X