முதல் முறையாக போட்டியிட்ட தொகுதிகளில் டெபாசிட் வாங்கிய தேமுதிக
கடந்த சட்டசபை பொதுத் தேர்தல்தான் தேமுதிக அதிகாரப்பூர்வமாக சந்தித்த முதல் தேர்தலாகும். அதன் பின்னர் நடந்த உள்ளாட்சித் தேர்தல், லோக்சபா தேர்தல், இடையில் வந்து போன சில சட்டசபை இடைத் தேர்தல்களில் அது போட்டியிட்டுள்ளது.
ஆனால் போட்டியிட்ட தேர்தல்களில் எல்லாம் 90 சதவீத தொகுதிகளில் அது டெபாசிட் தொகையை இழந்துள்ளது. மிக மிக அரிதாக டெபாசிட் தொகையைப் பெற்றது தேமுதிக.
ஆனால் முதல் முறையாக, இந்த ஐந்து தொகுதி இடைத் தேர்தலில்தான் தேமுதிக அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசிட் தொகையைத் திரும்பப் பெற்றுள்ளது. மேலும் முதல் முறையாக ஐந்து தொகுதிகளிலும் 2வது இடத்தையும் பிடித்து தேமுதிக வரலாற்றில் புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.
அதிமுக இல்லாத ஒரே காரணத்தால்தான் இது சாத்தியமாகியுள்ளது என்பது தெள்ளத் தெளிவானது என்றாலும் கூட தேமுதிகவின் வேகமான வளர்ச்சிக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என்பது உறுதி.