திருப்பதி நகை திருட்டு-சிபிஐ விசாரணை கோரும் சிரஞ்சீவி

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: திருப்பதி கோவில் நகைகள் திருடு போன விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பிரஜா ராஜியம் கட்சி தலைவர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் தினமும் லட்சக்கணக்கில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் கட்டுபாட்டில் வரும் கோதண்டராமசுவாமி கோவில் நகைகளை சரி பார்க்கும் பணி சமீபத்தில் நடந்தது.

அதில் ரூ. 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கோவில் அர்ச்சகர் வெங்கடரமண தீட்சிதர் என்பவரை கைது செய்தனர்.

இதை தொடர்ந்து மேலும் பல லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடு போயிருப்பதாக பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்நிலையில் இது குறித்து பிரஜா ராஜியம் கட்சி தலைவர் சிரஞ்சீவி கூறுகையில்,

கோவில் நகைகளை அர்ச்சகரே திருடியிருப்பது மிகவும் வருத்தமானது. இந்த நகை திருட்டு குறித்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அப்போது தான் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க முடியும்.

இந்த திருட்டு சம்பவத்தை அடுத்து தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோடி கணக்கான மதிப்பு கொண்ட மற்ற நகைகள் அனைத்தும் பத்திரமாக இருக்கிறதா என்பதை தேவஸ்தானம் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+