புதுச்சேரி-அக்டோபர் 3ல் மாநிலங்களவை தேர்தல்
நாடாளுமன்ற மாநிலங்களவைக்கான புதுச்சேரி உறுப்பினராக இருந்தவர் நாராயணசாமி. கடந்த மே மாதம் நடந்த மக்களவை தேர்தலில் இவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதையடுத்து அவர் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் காலியிடத்திற்கு அக்டோபர் 3ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது.
இது குறித்து அம்மாநில சட்டசபை செயலரும், தேர்தல் அதிகாரியுமான சிவபிரகாசம் கூறுகையில்,
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அக்டோபர் மாதம் 3ம் தேதி தேர்தல் நடைபெறும்.
வேட்பு மனுத்தாக்கல் வரும் 16ம் தேதி தொடங்குகிறது. 23ம் தேதி கடைசி நாள். வேட்பு மனுக்கள் 24ம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. மனுக்களை திரும்ப பெற்றுக் கொள்ள 26ம் தேதி கடைசி நாள் என்றார்.
திமுக கூட்டணி சார்பில் சமீபத்தில் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட்டு மீ்ண்டும் காங்கிரசில் இணைந்த கண்ணனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.