தண்ணீர் லாரி மோதி மாணவர் உள்பட 2 பேர் பரிதாப சாவு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் நேற்று காலை பேப்பர் போட சென்ற கல்லூரி மாணவர் உள்பட இருவர் தண்ணீர் லாரி மோதி பலியானார்கள்.
தூத்துக்குடி பெரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகன் மகேஷ். பிஏ பட்டதாரி. அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் ஆனந்த். இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.
ஏழ்மை நிலையில் உள்ள இவர்கள் படிப்பு செலவிற்காக பகுதி நேர வேலையாக தினமும் அதிகாலையில் வீடுகளுக்கு பேப்பர் போடும் தொழில் செய்து வந்தனர்.
வழக்கம்போல் நேற்று அதிகாலை 4 மணி அளவில் பேப்பர் போடுவதற்காக இருவரும் தனித்தனி சைக்கிளில் புறப்பட்டனர்.
கோரம்பள்ளம் ஐடிஐ பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் தண்ணீர் ஏற்றி வந்த டேங்கர் லாரி இவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மகேஷ், ஆனந்த் இருவரும் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் இன்ஸ்பெக்டர் முருகேசன் விசாரணை நடத்தி லாரி டிரைவர் பீமன் என்பவரை கைது செய்தார். மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications