7வயறு சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்
கரூர்: கரூர் அருகே 7 வயது சிறுமியை பலாத்காரம் முயன்ற 29 வயது காம கொடூரனை போலீசார் கைது செய்தனர்.
இந்த காம கொடூரன் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆர்ச்சம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் தேக்கமலை.
அவன் நேற்று முன்தினம் அதே பகுதியில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சக்திவேல் என்பவரின் மகள் காவியா என்ற இரண்டாம் வகுப்பு மாணவியின் வாயை பொத்தி தூக்கி சென்றுள்ளார்.
அருகிலிருந்த குளியலறைக்கு கொண்டு சென்று பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த சிறுமி கூச்சலிட்டதை அடுத்து வீட்டிலிருந்த அந்த சிறுமியின் பாட்டி முருகாயி ஓடி வந்துள்ளார்.
இதை பார்த்த அந்த காம கொடூரன் குழந்தையை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டான். இதையடுத்து அந்த சிறுமியின் தந்தை தோகமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பில் இருக்கும் ஆறுமுகத்திடம் புகார் கொடுத்தார்.
அவர்கள் தலைமறைவாக இருந்த தேக்கமலையை கைது செய்தனர். இந்த காமகொடூரனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.