For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீனவர்கள் மீது தாக்குதல்: இந்தியாவே பொறுப்பு-வைகோ

By Staff
Google Oneindia Tamil News

Vaiko
சென்னை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கப்பற்படை நடத்தும் தாக்குதலுக்கு இந்திய அரசே பொறுப்பு என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் தமிழர்கள் இன அழிப்பு யுத்தத்தை சிங்கள இனவாத அரசு நடத்துவதற்கு ஆயுதங்கள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து, மன்னிக்க முடியாத கொலைப்பழிக்கு உள்ளான இந்திய அரசு தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற்படையால் தாக்குதல்களுக்கு ஆளாவதைத் தடுக்க உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் மேலும் சிங்கள அரசுக்கு அனைத்துவிதமான உதவிகளை செய்து வரும் போக்கு நீடிப்பது இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தை விளைவிக்கும்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கப்பற்படை நடத்தும் தாக்குதலுக்கு இந்திய அரசே பொறுப்பு என குற்றம் சாட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X