தூதரகம் மீதான தாக்குதல் - காபூலில் நிரூபமா ராவ் ஆய்வு
Subscribe to Oneindia Tamil

தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலை குறித்தும், தாக்குதல் சம்பவம் தொடர்பாகவும் ஆய்வு செய்வதற்காக இன்று காபூல் விரைந்தார் நிரூபமா.
ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாயையும் அவர் சந்திப்பார் எனத் தெரிகிறது.
இந்தியத் தூதரகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நிரூபமா ஆய்வு செய்கிறார். தாக்குதலில் தூதரகத்தின் கண்காணிப்பு கோபுரம் வெடித்துச் சிதறி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தூதரகத்தை தகர்க்க நடந்த இந்தத் தற்கொலைப் படைத் தாக்குதலில் உள்ளூரைச் சேர்ந்த 17 பேர் உயிரிழந்தனர். இந்திய - திபெத் எல்லைப் படையைச் சேர்ந்த 3 பேர் லேசான காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications