நேபாளத்தில் வேட்டை - தமிழக வாலிபர் ரூ. 47 கோடி ஹெராயினுடன் கைது
Subscribe to Oneindia Tamil
காத்மாண்டு: ஜகார்த்தாவிலிருந்து விமானம் மூலம் காத்மாண்டுவுக்கு ரூ. 47 கோடி மதிப்பிலான ஹெராயினுடன் வந்த வாலிபரை நேபாள பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
ஜகார்த்தாவிலிருந்து வந்த விமானத்தில் பயணித்த ஒரு குறிப்பிட்ட பயணியை நேபாள போதைப் பொருள் தடுப்புப் படையினர் சோதனையிட்டனர். அப்போது அவரிடம் 19 கிலோ ஹெராயின் இருந்தது. அதன் மதிப்பு ரூ. 47 கோடி.
அதைக் கடத்தி வந்ததாக அந்த நபரை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications