ஊர் திரும்ப ரயில், பஸ் நிலையங்களில் அலை மோதும் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
செனனை: தீபாவளி பண்டிகை முடிந்து ஊர்களுக்குச் செல்ல பொதுமக்கள் ரயில், பஸ் நிலையங்களில் முன்பதிவு, தட்கல் டிக்கெட்டுகளுக்கு அலை மோதினர்.
தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. பண்டிகைக்காக லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு கடந்த சில நாட்களாக வந்து குவிந்தனர். சிறப்பு ரயில், பஸ்களில் கட்டுகடங்காத கூட்டம் அலைமோதியது. சொந்த ஊருக்கு வந்தவர்கள் மீண்டும் தங்கள் வசிக்கும் ஊர்களுக்குச் செல்ல செல்ல ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதி வருகின்றனர்.
தென் மாவட்டங்களி்ல் இருந்து சென்னை, கோவை உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்ல செல்ல பெரும் கூட்டம் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications