முல்லைப் பெரியாறு பிரச்சினை சுமூகமாக தீரும்- வாசன்
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி: முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு காணப்படும் என மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தர்மபுரிக்கு கல்யாணம் ஒன்றில் பங்கேற்க வந்த வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இரு மாநிலங்களுக்கு இடையிலான இந்தப் பிரச்சினைக்கு விரைவில் சுமூக தீர்வு ஏற்படும் என நம்புகிறேன்.
3 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவு மக்கள் காங்கிரஸ் மீது வைத்துள்ள நம்பிக்கையையும், கட்சி மீதான நம்பகத்தன்மையையும் உறுதி செய்வதாக அமைந்துள்ளது.
எதிர்காலத்தில், அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் சில தவறுகள் இருப்பதாக பல்வேறு மாநிலங்களிலிருந்து புகார்கள் வந்துள்ளன. அவை சரி செய்யப்படும் என்றார் வாசன்.












Click it and Unblock the Notifications