For Daily Alerts
Just In
நகைக்காக பெண் கொலை: கணவர் தற்கொலை
நெல்லை: நெல்லையில் நகைக்காக பெண் படுகொலை செய்யப்பட்டார். மனைவியின் கொடூரமான மரணத்தை தாங்க முடியாத கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை தச்சநல்லூர் கரையிருப்பு தெற்கு தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி முத்து. இவரது மனைவி கோமதி. கடந்த 22ம் தேதி கோமதி வயலுக்கு சென்றபோது 2 பேர் அவரை கொலை செய்து செயினை பறித்தனர்.
கோமதியின் உடலுடன் கல்லைக் கட்டி பிணத்தை அருகில் உள்ள கிணற்றுக்குள் போட்டுவிட்டுத் தப்பினர். இந்த கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு பாளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மனைவி கொலைக்கு பின் முத்து மிகுந்த வேதனையுடன் காணப்பட்டார். வெறுப்படைந்த நிலையிலேயே திரிந்த அவர் இன்று காலை கரையிருப்பு ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்.
அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
Story first published: Tuesday, October 27, 2009, 15:36 [IST]