திருச்செந்தூர்-ஜனவரி 30க்குள் இடைத்தேர்தல்
சென்னை: திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு வரும் ஜனவரி 30ம் தேதிக்குள் இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார்.
அதிமுக மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த ஜூலை 30ம் தேதி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
காலியாக உள்ள சட்டசபை தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் ஜனவரி 30ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
அனிதா ராதாகிருஷ்ணன் இப்போது திமுகவில் இணைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இடைத் தேர்தலில் திமுக சார்பில் அவரை நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது.
இந்த இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிக்குமா அல்லது போட்டியிடுமா என்பது தெரியவி்ல்லை. சில மாதங்களுக்கு முன் 5 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல்களைப் புறக்கணித்த ஜெயலலிதா, அடுத்து நடந்த உள்ளாட்சி இடைத் தேர்தலில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications