ஆஸி. கடலில் படகு மூழ்கி தமிழர்கள் உள்பட 27 அகதிகள் பலி

Subscribe to Oneindia Tamil

Refugees Boat
சிட்னி: இலங்கைத் தமிழர்கள் உள்ளடக்கிய அகதிகள் படகு ஒன்று ஆஸ்திரேலியக் கடலில் மூழ்கியது. இதில் 27 பேர் பலியாகியுள்ளதாக தெரிகிறது. 17 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்தேரிலாயவின் வடமேற்கு கடற்பரப்பில் இன்று இப்படகு மூழ்கியது. மொத்தம் 40க்கும் மேற்பட்டோர் அதில் இருந்ததாக தெரிகிறது.

ஆஸ்திரேலியாவை நோக்கி இந்தப் படகு வந்து கொண்டிருந்தது. இந்திப் பெருங்கடலில் காகஸ் தீவு அருகே இந்தப் படகு வந்தபோது, ஆஸ்திரேலியா கரையோர விமானக் கண்காணிப்புப் பிரிவினர் பார்த்துள்ளனர். அப்போது இந்தப் படகு திடீரென கடலில் மூழ்கியது.

இதையடுத்து மீட்புக் கப்பலை விரைந்து வருமாறு கண்காணிப்புப் பிரிவினர் உஷார்படுத்தினர். இதைத் தொடர்ந்து மீட்புக் கப்பல் விரைந்து வந்தது.

படகில் இருந்த 27 பேர் கடலில் மூழ்கி இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தப் படகில் இலங்கைத் தமிழர்களும் இருப்பதாக நம்பப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+