ஈரான்-ஜப்பான்- பிலிப்பைன்சில் நிலநடுக்கம்
தெஹ்ரான் & டோக்கியோ: ஈரான், ஜப்பானி்ல் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈரானில் வீடுகள் இடிந்து 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை 2.56 மணியளவில் தென் ஈரானில் உள்ள துறைமுக நகரான பந்தர் அப்பாஸை நிலநடுக்கம் தாக்கியது. அருகாமையில் உள்ள குவேசிம் பகுதியிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
ரிக்டர் அளவுகோளில் 4.9 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல வீடுகள் இடிந்து விழுந்து 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஜப்பானில்..
அதே போல ஜப்பானில் இன்று காலை 4.03 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு ஜப்பானின் போனின் தீவு அருகே கடலுக்கடியில் 86 கி.மீ. ஆளத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் சுனாமி அலைகள் ஏதும் ஏற்படவி்ல்லை.
பிலிப்பைன்சிலும்..
இந் நிலையில் இன்று பிலிப்பைன்ஸ் நாட்டிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந் நாட்டு நேரப்படி பகல் 2.21 மணியளவில் மின்டாநாவோ நகர் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏறபட்டது. இது 5.6 ரிக்டராக பதிவானது.
நிலத்துக்கடியால் 110 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் இல்லை.
1976ம் ஆண்டில் இப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் ஏற்பட்டு பெரும் சேதம் விளைந்தது.