For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொடரும் கன மழை - அணைகள், ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெய்து வரும் தொடர் மழையால் அணைகள், ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

சென்னையில் உள்ள ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் மட்டம் அதிக அளவில் உயர்ந்துள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் முழு நீர்மட்ட அளவு 24 அடி. நேற்று நீர்மட்டம் 10.70 அடியாக இருந்தது. இன்று 12 அடி ஆகி இருக்கிறது. நேற்று ஏரிக்கு விநாடிக்கு 1377 கன அடி தண்ணீர் வந்தது. இன்று விநாடிக்கு 2153 கன அடியாக அதிகரித்துள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு நேற்று 843 மில்லியன் கன அடி. இன்று 1029 மில்லியன் கன அடி. மழை அளவு 140 மில்லி மீட்டர்.

புழல் ஏரியின் முழு நீர் மட்ட அளவு 21.20 அடி. இன்று காலை நிலவரப்படி 9.41 அடியாக இருக்கிறது. நீர் வரத்து நேற்று 301 கன அடி. இன்று 696 கன அடி. தண்ணீர் இருப்பு 1181 மில்லியன் கனஅடி. மழை அளவு 145 மி.மீ.

பூண்டி ஏரிக்கு இன்று 1025 கன அடி தண்ணீர் வருகிறது. நேற்று 526 கன அடிதான் வந்தது. நீர் இருப்பு 1229 மில்லியன் கன அடி. நீர் மட்டம் 27.50 அடி. மொத்த உயரம் 35 அடி. மழை அளவு 71 மி.மீ.

வீராணம் ஏரியில் 589 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்கிறது. 400 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. உயரம் 15.60 அடி. இன்றைய நீர் மட்டம் 11.10 அடி. மழை அளவு 35 மி.மீ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X