சொத்துக் கணக்கை அறிவித்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்
லக்னோ: நீதித் துறையைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளும், ஒரு ஐபிஎஸ் அதிகாரியும் தாமாக முன்வந்து தங்களின் சொத்துக் கணக்குகளை வெளியிட்டுள்ளனர்.
மத்திய அமைச்சரவை கூடுதல் செயலாளர்களான விஜய்சங்கர் பாண்டே, சுனில்குமார், ரேணுகா சவுத்ரி மற்றும் போலீஸ் டிஐஜி ஜஸ்பீர் சிங் உள்ளிட்டோர் தங்களின் சொத்து விவரங்களை மத்திய அமைச்சரவை செயலருக்கு அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து விஜய்சங்கர் பாண்டே கூறுகையில், அரசு ஊழியராக இருப்பவர்களும் சரி, அரசியல் தலைவராக இருந்தாலும் சரி, மக்கள் பணியாற்றும் அனைவரும் தங்களின் எல்லா வகையான சொத்து விவரங்களையும் நேர்மையாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
மக்கள் சேவையில் ஈடுபடுவோரின் சொத்துக்களை பொதுவாக ஆராய்ந்து, அது பற்றிய தகவல்களை ஒவ்வோர் ஆண்டும் வெளியிட வேண்டும். மக்கள் சேவகர்கள் சொத்து விவரம் தாக்கல் செய்ய தனி ஏற்பாட்டையும் செய்யவேண்டும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications