Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ் அகதிகள் எதிர்காலம் ஐ.நா. கையில்- ஆஸி.

Subscribe to Oneindia Tamil

சிட்னி: இலங்கைத் தமிழர்களின் அரசியல் புகலிட கோரிக்கையின் எதிர்காலம் ஐ.நா.வின் அகதிகள் ஆணையத்தின் கையில் உள்ளது என்று ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் கூறியுள்ளார்.

இலங்கையிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலியா நோக்கி வந்த 78 தமிழர்களை ஆஸ்திரேலியக் குழுவினர் தடுத்து நிறுத்தி தங்களது ரோந்துக் கப்பல் மூலம் இந்தோனேசியாவுக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் இவர்கள் தங்கள் பொறுப்பு அல்ல என்று இந்தோனேசியா கூறி வந்தது. இதனால் பெரும் இழுபறி ஏற்பட்டது. இதையடுத்து 78 பேருக்கும் கொள்கை அளவில் புகலிடம் தர ஆஸ்திரேலியா ஒப்புக் கொண்டது. 12 வாரங்களுக்குள் 78 பேரையும் குடியேற்றம் செய்யவும் அது முன்வந்தது.

இதைத் தொடர்ந்து அந்தக் கப்பலிலிருந்து 22 தமிழர்கள் நேற்று வெளியேறி வந்தனர். மீதமுள்ள 56 பேரும் கப்பலிலேயே உள்ளனர். 22 பேரையும் தான்சுங் பினாங்கில் உள்ள குடியேற்றப் பிரிவு மையத்திற்கு இந்தோனேசியா அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் 78 பேரின் எதிர்காலம் ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் கையில் உள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெறும் ஆசியா பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரூட் சிங்கப்பூர் வந்துள்ளார்.

அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அனைத்து அரசியல் புகலிடம் கோரும் தமிழர்களின் கோரிக்கையை மிகவும் நிதானமாகவும், பொறுமையாகவும், முறைப்படியும் நாங்கள் அணுகுவோம்.

இருப்பினும் தனி நபர்களின் புகலிடக் கோரிக்கை குறித்து முதலில் கவலைப்பட வேண்டியது ஐ.நா. அகதிகள் ஆணையம்தான். இரண்டாவது அகதிகளை ஏற்பது தொடர்பாக ஐ.நா. பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ள 15 நாடுகளுடையதாகும்.

இந்த முறைப்படி இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தை நாங்கள் அணுகுவோம் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+