செங்கோட்டையில் சாமி சிலை உடைப்பு - போலீஸ் குவிப்பு
செங்கோட்டை மேலூர் பெரியசாமி தெருவில் பாலசக்தி வினாயகர் கோவில் மற்றும் அதன் அருகேயுள்ள வடக்குத்தி அம்மன் கோவில் தெருவில் கருப்பசாமி கோயில் உள்ளது. இந்த இரு கோவில்களையும் அப்பகுதியில் வசிக்கும் அனைத்து சமுதாய மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
இக்கோவிலில் நேற்று நள்ளிரவு யாரோ சில மர்ம ஆசாமிகள் வினாயகர் கோவிலில் செருப்பு, வாரியல், மற்றும் இதர மாட்டு கழிவு பொருட்களை அள்ளி உள்ளே வைத்தும், அதற்கு வடபுறம் உள்ள கருப்பசாமி கோவில் சிலையை நகராட்சி கழிவு நீர் ஓடையில் உடைத்து போட்டு விட்டு சென்றுள்ளனர்.
இன்று காலை அப்பகுதி மக்கள் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றபோது இக்காட்சியை கண்டு அதிர்ந்து அப்பகுதி மக்களிடம் கூறவே ஆண்களும், பெண்களும் திரண்டு வந்தனர். செங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன், தாசில்தார் ராஜையா, பாஜக, இந்து முண்ணனி பிரமுகர்களும் அங்கு திரண்டு வந்தனர். கூடியிருந்த பொது மக்களிடம் போலீசார் குற்றவாளிகளை பிடித்து விடுவதாக வாக்குறுதி அளித்தனர்.
ஆனால் ஆண்களும், பெண்களும் அஙகு திரண்டு வந்து கொண்டே இருந்தால் பதட்டம் உருவானது. போலீசார் சாமதானத்தை ஏற்க மறுத்த பொதுமக்கள் ஊர்வலமாக செங்கோட்டை காவல் நிலையம் முன்பு திரண்டதால் மேலும் பரபரப்பு உருவானது. இதனை தொடர்ந்து குற்றாலம், கடையம், தென்காசி, உள்ளிட்ட காவல் நிலையங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டு குவிக்கப்பட்டனர்.
திடீரென திரண்டு நின்ற பொதுமக்கள் ஒரு அரசு பேருந்தை மறித்து மறியலில் ஈடுபட்டனர். ஓடிவந்த போலீசார் சமாதானம் செய்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.
தென்காசி கோட்டாச்சி தலைவர் மூர்த்தி, அம்பை டிஎஸ்பி கோபாலன், மற்றும் மேலூர் பகுதி சமுதாய தலைவர்கள் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர். பேச்சு வார்த்தையில் இன்று இரவுக்குள் குற்றவாளிகளை பிடித்து விடுவோம் என்று உறுதி கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க், தனிபிரிவு இன்ஸ்பெக்டர் குப்புசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர். செங்கோட்டை நகர் முழுவதும் உள்ள பள்ளிவாசல்கள் முன்பும், சம்பந்தபட்ட வினாயகர் கோவில் முன்பும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!













Click it and Unblock the Notifications