சாலையில் நின்ற லாரியால் விபத்து- 3 பேர் பலி
மதுரை: சாலையில் நின்ற லாரி மீது பின்னால் வந்த லாரி மோதியதில் மூன்று பேர் பரிதாபமாக பலியானார்கள்.
மதுரை திருநகர் அருகே தோப்பூர் நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கிற்கு நாமக்கல் மோகனூரில் இருந்து ஒரு லாரி வந்தது. அதிகாலை 4 மணி அளவில், இந்த லாரியில் இருந்த டிரைவர் முகவரி விசாரிக்க தோப்பூர் நான்குவழிச் சாலை 'அண்டர்பாஸ்' பாலத்தின் இறக்கத்தில் லாரியை நிறுத்தினார்.
அப்போது பரவையிலிருந்து சிவகாசிக்கு காய்கறி ஏற்றிச் சென்ற லாரி, நின்றிருந்த லாரியின் பின் பகுதியில் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், லாரியில் இருந்த சிவகாசி வசந்தம் நகர் கோச்சடை (28), ஆமத்தூர் லட்சுமணன்(42), திருத்தங்கல் காளிராஜ்(55) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.
மேலும், கருப்பசாமி,வையாபுரி, சோமுராஜ், டிரைவர் பாலசேகரன் (42) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த அவர்களை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications