துபாயில் கனமழைச ஒரேநாளில் 170 விபத்துகள் பதிவு
Subscribe to Oneindia Tamil
துபாய்: அமீரக பகுயில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் கன மழை காரணமாக 170 விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக துபாய் போலீசார் தெரிவித்தனர்.
துபாயில் 22.2 மி.மீட்டரும், அபுதாபி நகரில் 43.4 மி.மீ. ஷார்ஜாவில் 35.6 மி.மீ.மழை பெய்தது. டான்டா என்ற சிறிய நகரத்தில் தான் மிக அதிக பட்சமாக 63 மி.மீ.மழை பெய்தது.
மசாபி நகரில் 61.2 மி.மீ.மழை பெய்தது.
மழை காரணமாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. பல்வேறு சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
போக்குவரத்து பாதிப்பு, கார் விபத்துகள், வெள்ளப் பெருக்கு என கடுமையான பாதிப்பை அமீரக நகரங்கள் எதிர்கொண்டன.












Click it and Unblock the Notifications