கோவை சூதாட்ட கிளப்களில் ரெய்டு- 93 பேர் சிக்கினர்
Subscribe to Oneindia Tamil
கோவை: கோயம்புத்தூரில் செயல்பட்டு வந்த சூதாட்ட கிளப்புகளில் திடீர் சோதனை நடத்தியதில் 93 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து சூதாட்டப் பணம் ரூ.3.32 லட்சம் கைப்பற்றப்பட்டது.
கோவை, ஆவராம் பாளையம் ரோட்டில் பேலஸ் கிளப் உள்ளது. இம்மனமகிழ் மன்றத்தில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, கமிஷனர் உத்தரவின் பேரில், உதவிகமிஷனர் நகராஜ் தலைமையில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதில், மனமகிழ் மன்ற மேலாளர் ஜெயக்குமார் உட்பட 69 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், ஜிகேடி நகரில் உள்ள கிரின் போர்ஸ் கிளப்பில் நடந்த சோதனையில், 24 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.32 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications