மகளிர் மசோதாவை எதிர்க்காதீர்கள், பெண் பாவம் பொல்லாதது: முலாயமுக்கு அமர் எச்சரிக்கை!
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அமர்சிங் தனது பிளாக்கில் எழுதியுள்ளதாவது..
ஓ, முலாயம் சிங் யாதவ் அவர்களே. தயவு செய்து, பெண்களின் கோபத்தை தேவையில்லாமல் வாங்கிக் கட்டிக் கொள்ளாதீர்கள். பெண் பாவம் பொல்லாதது. உங்களுக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ, அது (மகளிர் மசோதா) அரசியல் ரீதியான விஷயமாகி விட்டது. எனவே அதை நீங்கள் நினைத்தாலும் தடுக்க முடியாது.
இந்தப் பிரச்சினைக்காக மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவது என்பது முட்டாள்தனமான விஷயம். ராஜ்யசபாவில் சமாஜ்வாடிக் கட்சி எம்.பிக்கள் மிகவும் அநாகரீகமாக நடந்து கொள்கிறாரக்ள். நாடாளுமன்றத்தின் மதிப்பை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்கிறார்கள் என்று கூறியுள்ளார் அமர்சிங்.












Click it and Unblock the Notifications