கோஷ்டி தகராறு - நாகையில் பாஜக பிரமுகர் தாக்கப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

நாகை: கோஷ்டி தகராறு காரணமாக நாகையில் பாஜக மாவட்ட இளைஞரணித் தலைவர் கொடூரமாக தாக்கப்பட்டார்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை பல்லவராயன் பேட்டையைச் சேர்ந்தவர் இளவரசன்(36); பாஜக மாவட்ட இளைஞர் அணி தலைவர்.

இவர், மயிலாடுதுறை நகர தலைவர் பதவிக்கு கட்சித் தலைமையிடம் மனு தாக்கல் செய்துள்ளார்.

பாஜக மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு, தனது ஆதரவாளருக்கு நகர தலைவர் பதவியை பெறுவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்.

இந்நிலையில், இளவரசன் மனு தாக்கல் செய்ததால் ஆத்திரமடைந்த நாஞ்சில் பாலு, அவரது ஆதரவாளர்கள் சிற்றரசு(30), முருகன்(28), மணி(33), சேகர்(38) ஆகியோர் அங்காடி தெருவில் நின்று கொண்டிருந்த இளவரசனை தாக்கினர்.

இளவரசனை அரிவாளால் தலையில் வெட்டி, இரும்பு செயின், உருட்டுக்கட்டையால் கடுமையாக தாக்கினர்.

படுகாயமடைந்த இளவரசன், மயிலாடுதுறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மயிலாடுதுறை போலீசார், நாஞ்சில் பாலுவின் ஆதரவாளர்களை கைது செய்து, தப்பியோடிய மாவட்ட தலைவரை தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+