பென்னாகரம் தேர்தல் முறையாக நடந்துள்ளது: அன்புமணி பேட்டி

Subscribe to Oneindia Tamil

சேலம்: பென்னாகரம் தேர்தல் முறையாக நடந்துள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

சேலம் மாவட்டம் மேச்சேரியில் நேற்று திமுக - பாமகவினர் இடையே நடந்த மோதல் மற்றும் போலீஸ் தடியடி சம்பவங்களில் மேச்சேரி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ராஜா, கோல்காரனூரை சேர்ந்த மணிவண்ணன் உள்பட 15 பாமகவினர் காயம் அடைந்தனர்.

அவர்களில் மணிவண்ணன், ராஜா உள்பட சிலர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களை பாமக முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி நேற்று இரவு பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் அன்புமணி நிருபர்களிடம் கூறுகையில்,

'எங்கள் கட்சி தொண்டர்களை போலீசார் கடுமையாக அடித்துள்ளார்கள். இதில் 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு தலையில் அடி விழுந்தது. முன் அறிவிப்பு இல்லாமல் இப்படி லத்தி சார்ஜ்' செய்துள்ளார்கள்.

இதுகுறித்து நாங்கள் சென்னை, டெல்லி மனித உரிமை ஆணையத்திடம் புகார் செய்ய உள்ளோம்.

பென்னாகரம் தேர்தல் கள்ள ஓட்டுகள் இல்லாமல் முறையாக நடந்துள்ளது. தேர்தலை அதிகாரிகள் கண்காணிப்பு காமிரா வைத்து பார்த்தார்கள்.

ஆனால் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் படலம், தேர்தலுக்கு முன்பும், தேர்தல் முடிந்த பிறகு வாக்களித்தவர்களுக்கு சில இடங்களில் பணமும் வழங்கப்பட்டுள்ளது. 80 சதவீத வாக்குப்பதிவு நடந்துள்ளதால் மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள்' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+